வாழ்க்கை ஒரு வட்டம்
எத்தனை துன்பம் வந்தாலும் உன்னுடன் இருந்தால்
எதையும் தாங்கமுடியும் என்ற நிலைமாறி
இத்தனை துன்பம் தாங்கி சேர்ந்து வாழ வேண்டுமா
என்ற எண்ணம் தோன்றலாயிற்று
கூடல்களுக்கு நடுவே சிறு சிறு ஊடல்கள் என்ற காலம் மாறி
ஊடல்களுக்கு நடுவே கூடல்களை தேடும் நிலை
நாட்கள் கரைய ஊடலின் வீரியம் குறைய
அன்பும் அரவணைப்பும் மனம் தேட
எதற்கு சண்டையிட்டோம் என்றே மறந்துபோக
கோபம் மறைய காதல் தெரிய
மனம் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது
அடுத்த சண்டைக்கு காத்திருக்க தொடங்கியது
வாழ்க்கை ஒரு வட்டம் !

0 Comments:
Post a Comment
<< Home